Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 15 November 2015

இன்றைய புனிதர் 2015-11-15 ஆயர் பெரிய ஆல்பர்ட் மறைவல்லுநர் Albert der Große


பிறப்பு1193(?),பவேரியா, ஜெர்மனி


இறப்பு15 நவம்பர் 1280,கொலோன் Köln

பாதுகாவல்: இறையியல் ஆசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள்,மலைவாழ் மக்கள்
இவர் குதிரைச்சவாரி கற்றுக்கொடுக்கும் பெற்றோரின் மகனாகப் பிறந்தார். பதுவையில் புனித தொமினிக்கன் சபைக்குச் சொந்தமான கல்லூரியில் படித்தார். படித்து முடித்தபின் 1223 ஆம் ஆண்டு அச்சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு எண்ணிலடங்கா கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் பாரிசிலும், கொலோன் கல்லூரிகளிலும் பணியாற்றினார். இவர் 1248 ஆம் ஆண்டு கொலோன் நகரில் துறவற மடத்திற்கு சொந்தமாக கல்லூரி ஒன்றை கட்டினார். அக்கல்லூரியில் ஆன்மீகத்திற்கு வழிகாட்டும் விதமாக பலமுறை கருத்தரங்குகளை நடத்தினார்.

இவர் தன் சபையிலிருந்த மாநிலங்களில் ஒன்றிற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் 1260 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க்கிற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை 11 ஆம் பயஸ் ஆல்பர்ட்டிற்கு திருச்சபையின் மறைவல்லுநர் என்ற பட்டத்தை 1931 ஆம் ஆண்டு வழங்கினார். ஆல்பர்ட் பல இடங்களில் மக்கள் இனங்களுக்கும் நகரங்களுக்கிடையிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கென்று அயராது பல முயற்சிகளை மேற்கொண்டார். இவர் இயற்கை அறிவு, மறை அறிவு வளர்ச்சிக்கான பல அரிய நூல்களையும் எழுதியுள்ளார்.


செபம்:
ஆண்டவராகிய கடவுளே! ஆயராம் புனித பெரிய ஆல்பர்ட் இவ்வுலக ஞானத்தையும், இறை நம்பிக்கையையும் இணைப்பதில் சிறந்து விளங்க செய்தீர். நாங்கள் நல்லாசிரியராகிய அவரது போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றத்தின் வழியாக உம்மை அறிந்து, ஆழ்ந்து அன்பு செய்வதிலும் எங்களை இட்டுச் செல்லவும் அருள்புரியும்.

No comments:

Post a Comment