Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 2 November 2015
இன்றைய புனிதர் 2015-11-03 அர்மாக் நகர் பேராயர் மலாக்கியஸ் Malachias von Armagh
இவர் பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை துறவற மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரிந்ததால், மலாக்கியுசும் அங்கே படித்தார். பின்னர் தனது கல்வியை முடித்தபின் 1119 ஆம் ஆண்டு, குருத்துவப்பட்டம் பெற்றார். பிறகு 1123 ஆம் ஆண்டு கொனோர்(Conor) நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு மீண்டும் 1129 ஆம் ஆண்டு அர்மாக் நகருக்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பேராயர் பதவியில் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனால் பல இன்னல்களை சந்தித்தார். தனது பணியை சரியாக செய்ய இயலாததால் 1136 ஆம் ஆண்டு மீண்டும் டவுன் (Down) என்ற நகருக்கு ஆயராக அனுப்பப்பட்டார். பல ஆண்டுகள் தன் ஆயர் பதவியில் சிறப்பாக பணியாற்றியப்பின் சிஸ்டர்சீயன் துறவற சபையை சார்ந்த பெர்னார்டு என்பவருடன் இணைந்து சில துறவற மடங்களைக் கட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment