Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 2 November 2015

இன்றைய புனிதர் 2015-11-03 அர்மாக் நகர் பேராயர் மலாக்கியஸ் Malachias von Armagh


பிறப்பு1095,அர்மாக் Armagh, அயர்லாந்து


இறப்பு1 அல்லது 2 நவம்பர் 1148,கிளேர்வாக்ஸ் Clairvaux, பிரான்சு

புனிதர்பட்டம்: 6 ஜூலை 1190, திருத்தந்தை 3 ஆம் கிளமெண்ட்

இவர் பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை துறவற மடத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணிபுரிந்ததால், மலாக்கியுசும் அங்கே படித்தார். பின்னர் தனது கல்வியை முடித்தபின் 1119 ஆம் ஆண்டு, குருத்துவப்பட்டம் பெற்றார். பிறகு 1123 ஆம் ஆண்டு கொனோர்(Conor) நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு மீண்டும் 1129 ஆம் ஆண்டு அர்மாக் நகருக்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பேராயர் பதவியில் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனால் பல இன்னல்களை சந்தித்தார். தனது பணியை சரியாக செய்ய இயலாததால் 1136 ஆம் ஆண்டு மீண்டும் டவுன் (Down) என்ற நகருக்கு ஆயராக அனுப்பப்பட்டார். பல ஆண்டுகள் தன் ஆயர் பதவியில் சிறப்பாக பணியாற்றியப்பின் சிஸ்டர்சீயன் துறவற சபையை சார்ந்த பெர்னார்டு என்பவருடன் இணைந்து சில துறவற மடங்களைக் கட்டினார்.

பின்னர் மலாக்கியஸ் துறவற கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் உரோம் நகர் சென்று திருத்தந்தையை சந்திக்க எண்ணினார். அப்போதுதான் கடினமான நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.


செபம்:
நல்ல ஆயனாம் எம் இறைவா! ஆயர் மலாக்கியஸ் அடைந்த துயரைப்போலவே, இன்றும் பல ஆயர்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். எம் திருச்சபையில் உமக்காகத் துன்பப்படும் ஒவ்வொரு ஆயர்களுக்கும் எதையும் தாங்கும் இதயத்தைத் தாரும். நீரே அவர்களின் துன்பநேரங்களில் உடனிருந்து வழிநடத்தி, திடப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment