Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 20 November 2015

இன்றைய புனிதர் 2015-11-20 வாலோய்ஸ் நகர் பெலிக்ஸ் Felix von Valois


பிறப்பு1127,வாலோய்ஸ், பிரான்சு


இறப்பு1212,பாரிஸ், பிரான்சு

இவர் மிக மதிப்புமிக்க அரசரின் குடும்பத்தில் மகனாக பிறந்தவர். தனது கல்வியை முடித்தபிறகு குருப்பட்டம் பெற்றார். குருவான பிறகு தனிமையாக வாழ்ந்து கடுமையான ஏழ்மையை கடைபிடித்தார். இவர் காட்டில் வாழும் துறவிகளை போல, அனைத்தையும் துறந்து வாழ வேண்டுமென்பதை விரும்பினார். சில ஆண்டுகள் கழித்து இளமையான மருத்துவர் ஒருவர் பாரிசிலிருந்து சென்று பெலிக்சை சந்தித்தார். அவர் பெலிக்ஸ் வாழும் வாழ்வை தானும் வாழ விரும்பி குருப்பட்டம்பெற்றார்.

இவர்கள் இருவரும் தனிமையாக சென்று கடுந்தவம்புரிந்து இறைவேண்டலில் ஈடுபட்டனர். இவர்களிடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் ஒரே மனநிலை கொண்டவராக திகழ்ந்தனர். ஒன்று சேர்ந்து பல பெரிய பெரிய காரியங்களை செய்தனர். அச்சமயத்தில் விதவைகளும், கைவிடப்பட்டவர் களும் ஏராளமானோர் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களுக்கெல்லாம், இவர்கள் இருவரும் உதவி செய்தனர். தங்களின் முழு அன்பையும் அம்மக்களுடன் பகிர் ந்தனர். அம்மக்களுக்காக சபை ஒன்றையும் நிறுவினார். பல துன்பங்களை அனுபவித்தார். இருப்பினும் இறையருளால் தங் களின் பணியிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் தைரிய முடன் அச்சபையை வழிநடத்தினர். அச்சபையானது தொடங்க ப்பட்ட மிக குறுகிய காலத்தில் பிரான்சு நாடு முழுவதும் பரவி யது.  இவர் சிறந்ததோர் வரலாற்று மனிதராகப் புகழப் பட்டார். சிறிய மனிதராக இருந்தபோதும் ஆண்டவரின் பணியை பெரு மள வில் சிறப்பாக ஆற்றினர்.
செபம்:
நிறைவாழ்வளிக்கும் அன்புத் தந்தையே! தான் ஓர் அரசர் குடும் பத்தில் பிறந்தும் ஏழ்மையை தேர்ந்து உலகுக்கு சாட்சியாக வாழ்ந்த பெலிக்சை போல, நாங்கள் பெயருக்காகவும், புகழுக் காகவும் வாழாமல் உமது அன்பு பிள்ளைகளாக மட்டுமே வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

No comments:

Post a Comment