Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 9 November 2015

இன்றைய புனிதர் 2015-11-09 ஹைஸைட்டா நகர் மறைசாட்சி தெயோடர் Theodor von Euchiata


பிறப்பு 3 ஆம் நூற்றாண்டு, அர்மேனியன் அல்லது சிரியா


இறப்பு 306, சிறிய ஆசியா

பாதுகாவல்: படைவீரர்கள், போரிலிருந்து

இவர் தன்னுடைய இளமைப்பருவத்திலேயே உரோமைத்திருச்சபையோடு இணைந்தார். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றக்கூடாது என்பதற்காக இவருக்கு தடைவிதிக்கப்பட்டது. அத்தடையை அவர் மீறியதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். பின்னர் இவர் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தீர்ப்பிடப்பட்டார். தீர்ப்பின் இறுதியில் இவர் இறக்கவேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இவர் சாகும்முன் ஒருநாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த ஒரு நாளிற்குள் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


இவர் அந்த ஒருநாளில் ஊருக்குள் சென்று அவ்வூரிலிருந்த ஆலயத்திற்குள் சென்று செபித்தார். பின்னர் மரியன்னை கெபியின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடினார். அதன்பிறகு மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! எங்கள் வேண்டுதல்களுக்கு தயவுடன் செவிசாய்த்தருளும். உம் மகன் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றதைப்போல, இறந்த உம் அடியார்களும் உயிர்பெறுவார்கள் என்ற நம்பிக்கையை உம் மக்கல் கொண்டு வாழ செய்தருளும்படியாக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment