Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 16 November 2015

இன்றைய புனிதர் 2015-11-16 ஸ்காட்லாந்து அரசி மர்கரீட்டா Margareta von Scotland

இன்றைய புனிதர்

2015-11-16

ஸ்காட்லாந்து அரசி மர்கரீட்டா Margareta von Scotland


பிறப்பு1046,ரேஸ்கா Reska, ஹங்கேரி

இறப்பு16 நவம்பர் 1093,எடின்பூர்க் Edinburgh, ஸ்காட்லாந்து

பாதுகாவல்: ஸ்காட்லாந்த

இவர் இங்கிலாந்து நாட்டு அரசர் எட்வர்ட் அவர்களின் மகள். இவரின் தாய் ஆகத்தா (Agatha), ஹங்கேரி நாட்டு அரசி மர்கரீட்டா 1057 ஆம் ஆண்டிலிருந்து தன் மாமாவின் கண்காணிப்பில் இங்கிலாந்தில் வளர்ந்தார். 1066 ஆம் ஆண்டு இவரின் 20 ஆம் வயதில் ஸ்காட்லாந்திற்கு சென்றார். அங்குதான் அரசர் 3 ஆம் மால்கோம்(Malcolm)என்பவரிடம் பழகி, பின்னர் அவரையே திருமணம் செய்தார். தன் கணவர் அவரை கிறிஸ்துவ மறையை தழுவக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் அவர் தன் கணவரின் பேச்சை மறுத்து மேலும் தன் கிறிஸ்துவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்.

அரசி ஏழை மக்களின் வாழ்வில் அதிக அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு பலவிதங்களில் உதவினார். ஏழைகளை தன் இதயத்தில் சுமந்து உதவினார். ஏழை மக்களின் நலனிற்கென்று, நிறுவனம் ஒன்றையும் நிறுவி வேலை வாய்ப்புகளை வழங்கினார். தான் ஓர் அரசியாக இருந்தபோதும், துறவிகளைப் போலவே, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். தவறாமல் நோன்பிலிருந்து செபித்து பல நலன்களை பெற்றார். பலவிதங்களிலும் ஒறுத்தல் செய்து வாழ்ந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! நீரே ஒளி. இருள் என்பது உம்மிடம் இல்லை. உமது பேரொளியினால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும். ஏழைமக்களின் மீது அன்பு கொண்டு, அரசி மர்கரீட்டா வாழ்ந்த வழியில் சென்று, நாங்கள் மகிழ்வுடன் உமது முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்து வாழ செய்தருளும்.

No comments:

Post a Comment