Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 2 November 2015
இன்றைய புனிதர் 2015-11-02 லோட்ரிங்கன் நகர் துறவி மர்கரீத்தா Margareta von Lothringen
இவர் லோட்ரிங்கன் அரசன் பிரட்ரிக் என்பவரின் மகள். இவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே தூரிங்கன் நாட்டு(Thüringen) புனித எலிசபெத்தைப்போல வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டார். எலிசபெத் மர்கரீத்தாவின் தூரத்து உறவினர் ஆவர். மர்கரீத்தா ஏழைகளின் வாழ்வில் அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். துறவியாக வேண்டுமென்றும் அதன் வழியாக பல ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றும் விரும்பினார். ஆனால் அவரின் தந்தை, அவரின் 25 ஆம் வயதில் ரெனே டி அலேங்கோன் (Rene d’ Alencon) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். 4 ஆண்டுகள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் தன் கணவர் இறந்துவிடவே, தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கிறிஸ்துவ விசுவாசத்தில் வளர்த்தார். பின்னர் தன் கணவரின் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். பல கிறிஸ்துவ ஆலயங்கள் கட்டவும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் உதவிகளை செய்தார். பின்னர் தன்னுடைய 3 பிள்ளைகளும் வளர்ந்து இவரைவிட்டுப் பிரிந்து செல்லவே, கார்மேல் கிளரீசியன் மடத்திற்கு சென்றார். அங்கு மற்ற துறவிகளுடன் சேர்ந்து, அர்கெண்டானில் துறவற இல்லம் ஒன்றைக் கட்டினார். அங்குதான் இவர் துறவற பயிற்சிகளைப் பெற்று, வார்த்தைப்பாடுகளைப் பெற்றார். ஆன்மீக வாழ்வில் சிறந்து வாழ்ந்த இவர் துறவியான சில ஆண்டுகளிலேயே இறந்தார். இன்று இவரின் கல்லறைமேல் பங்கு ஆலயம் ஒன்று கட்டுப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment