Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 13 November 2015

இன்றைய புனிதர் 2015-11-14 மறைசாட்சி நிக்கோலாஸ் டாவெலிக் மற்றும் அவரின் தோழர்கள் Nikolaus Tavelic und Gefährten OFM


பிறப்பு14 ஆம் நூற்றாண்டு,டால்மியா Dalmatien


இறப்பு14 நவம்பர் 1391,எருசலேம்

இவர் நவம்பர் 11 ஆம் நாள் 1970 ஆம் ஆண்டு தன் தோழர்களுடன், முகமதியர்களின் திருவிழாவின்போது அவர்களிடையே மறையுரையை ஆற்றினர். அச்சமயத்தில் சில யூதர்களால் இவர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு எவரும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முன் வராததால் எதிரிகளால் வதைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களின் துறவற சபை சகோதரர்கள், அவர்களை காப்பாற்ற சென்றனர். இருப்பினும் அவர்களால் மறைசாட்சியர்களை காப்பாற்ற இயலவில்லை. எதிரிகள் நிக்கோலசையும் அவரின் தோழர்களையும் கைது செய்தனர். அவர்களின் கைகளில் விலங்குகளை மாட்டி தெருத்தெருவாக இழுத்து சென்று அடித்தனர்.

இவர்கள் 4 பேரையும் எதிரிகள் உணவின்றி பட்டினி போட்டனர். இருப்பினும் நான்கு பேரும், எதற்கும் அஞ்சாமல் கடவுளை போற்றி புகழ்ந்தனர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இதனைக் கண்ட எதிரிகள் 4 பேரையும் கொல்லத் திட்டமிட்டனர். பின்னர் இவர்கள் நால்வரும் ஆழ்ந்த இறைவேண்டலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் பிடித்துக்கொண்டு போகப்பட்டு, உயிருடன் எதிர்த்துக் கொன்றனர். பின்னர் சுட்டெரித்த உடலின் சாம்பலை எருசலேம் முழுவதிலும் தூவினர்.


செபம்:
கருணைக் கடலாம் எம் தந்தையே! உம் பணியை ஆர்வமுடன் ஆற்றி, உமக்காக இறக்கும் பேற்றை இன்றைய புனிதர்களுக்கு கொடுத்தீர். தங்களின் இறுதிமூச்சுவரை உமக்காக வாழ்ந்த அவர்களின் வாழ்வை கண்டு, உமக்கு நன்றி கூறுகின்றோம். அப்புனிதர்களின் விசுவாசத்தை நாங்களும் எமதாக்கி வாழ, எம்மை தயாரித்திட வேண்டுமாய் தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment