Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 18 November 2015
இன்றைய புனிதர் 2015-11-18 குளுனி துறவி ஓடோ Odo von Cluny OSB
பிறப்பு 878, அக்குயிடானியன் Aquitanien, பிரான்சு
இறப்பு18 நவம்பர் 942,தூர்ஸ் Tours, பிரான்சு
பாதுகாவல்: மழைக்காக, பாடகர்கள்
இவர் ஓர் படைவீரரின் குடும்பத்தில் பிறந்தார். குளுனி சபையில் சேர்ந்து குருவானார். அச்சபையைத் தொடங்கிய பெர்னோ(Berno) என்பவரின் இறப்பிற்குப்பிறகு ஓடோ அச்சபையை பொறுப்பேற்று வழிநடத்தினார். இவர் சபைத்தலைவராக பொறுப்பேற்றபின்னர், ஏராளமானோர் அச்சபையில் சேர்ந்தனர். இவர் தன் பதவிகாலத்தில் 17 துறவற மடங்களைக் கட்டினார். தன் சபை குருக்கள் அனைவரும் இவரை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டனர். அந்தளவிற்கு இவர் மிக எளிமையான வாழ்வை செயல்பட்டனர்.
இவர் ஆலய இசைகளில் அன்புக்கொண்டிருந்தார். திருப்பலிப் பாடல்கள் பலவற்றை இவரே உருவாக்கினார். இவரால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இன்றுவரை திருச்சபையில் பாடப்பட்டு வருகின்றது. இவர் பிரான்சு நாட்டு மக்களால் "புகழ்பெற்ற இசைக்கலைஞர்" என்ற பட்டம் பெற்றார். இவர் இறந்தபிறகு இவரின் உடல் புனித ஜூலியன் கல்லறை அருகில் புதைக்கப்பட்டார்.
செபம்: கலைகளின் கலைஞரே! பாடும் திறமையை ஓடோ அவர்களுக்குக் கொடுத்து தன் அழகிய குரலால் உம்மை போற்றி புகழ்ந்து வாழ்த்த வாய்ப்பளித்தீர். இன்றும் தான் பெற்ற அழகிய குரலைக்கொண்டு, உம்மை போற்றத் துடிக்கும் நண்பர்களை ஆசீர்வதியும். அவர்களின் திறமையை மேன்மேலும் வளர்த்து உம்மை மகிமைப்படுத்த செய்தருளும்.
No comments:
Post a Comment