Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 10 November 2015

இன்றைய புனிதர் 2015-11-10 மறைப்பணியாளர் அந்திரேயாஸ் அவேலினோ Andreas Avellino


பிறப்பு1521, சிசிலி Sizilien, இத்தாலி


இறப்பு 10 நவம்பர் 1608,நேயாப்பல் Neapel, இத்தாலி

புனிதர்பட்டம்: 1712, திருத்தந்தை 11 ஆம் கிளமெண்ட்

இவர் தனது குருத்துவப்பட்டம் பெற்றபின், சிசிலி சென்று சட்டக்கலையை பயின்றார். பின்னர் திருச்சபை சட்ட வல்லுநராக பணியாற்றினார். ஆனால் அப்பணியில் அவரின் மனம் நிறைவடையவில்லை. ஆன்ம குருவாக பணியாற்ற வேண்டுமென்பதையே பெரிதும் விரும்பினார். அதனால் 1556 ஆம் ஆண்டு, சிசிலியிலிருந்த துறவற சபை ஒன்றில் சேர்ந்து மறைப்பணியாளராக பணியாற்றினார். பலருக்கு ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். அழகிய எளிமையான மறையுரையால் பல ஆன்மாக்களை பாவ வாழ்விலிருந்து மீட்டார். பின்னர் இவர் அத்துறவற சபையினை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றார். தன் பணியில் மகிழ்ச்சியடைந்த அந்திரேயாஸ் தனது 87 ஆம் வயதில் இறந்தார்.

செபம்:
"வாழும் கடவுளின் கோவில் நாமே" என்றுரைத்த இறைவா! சிறந்த ஆன்ம குருவாய் திகழ்ந்த அந்திரேயாசைப் போல, சிறப்பான முறையில் உம் அருளைப்பெற்று பணியாற்ற குருக்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும். தங்களின் எளிமையான வாழ்வாலும் மறைப்பணியாலும் மக்களை உம்பால் ஈர்க்க வரம் அருளும்.

No comments:

Post a Comment