Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 25 November 2015

இன்றைய புனிதர் 2015-11-25 கர்தினால் சார்லஸ் மார்டியல் அல்லெமாண்ட் லவிகேரீ Charles-Martial-Allemand Lavigerie


பிறப்பு31 அக்டோபர் 1825,பயோன்னே Bayonne, பிரான்சு


இறப்பு25 நவம்பர் 1892,அல்ஜீரியா

இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பேராசிரியராக பணியாற்றினார். 1863 ஆம் ஆண்டு நான்சி (Nancy)என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1867 ல் அல்ஜீரியாவிற்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1882 ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் ஆப்ரிக்காவில் மறைபரப்புப் பணியை ஆற்றச் சென்றார். பின்னர் 1886 ல் "வெள்ளை அருள்தந்தையர்" (Weißen Vater) என்ற பெயரிலும் "வெள்ளை அருள்சகோதரிகள்" (Weißen Schwestern) என்ற பெயரிலும் சபை ஒன்றை நிறுவினார்.

இவர் ஆப்ரிக்காவில் முஸ்லீம் இன மக்களிடையே தன் மறைபரப்பு பணியை ஆற்றினார். ஆப்ரிக்காவின் பல்வேறு நகரங்களில் மறைபரப்பு மையங்களை நிறுவினார். பின்னர் மால்டாவில் Malta மறைக்கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். பின்னர் 12 நவம்பர் 1890 ல் மறைப்பணீயை பரப்புவதற்காக அல்ஜீரியாவிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு இவர் கார்த்தாகோவில் Karthago இருந்த பேராலயத்தில் பணிபுரிந்துவந்தார். பல இளைய பெண்களுக்கு வழிகாட்டி துறவியாக்கினார்.


செபம்:
நிறைவாழ்வளிக்கும் இறைவா! கர்தினால் சார்லசை நீர் படிப்படியாக உயர்த்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக பல வித்தியாசமான முறையில் மறைப்பணியாற்றிய இவரைப்போல, ஒவ்வொரு மறைப்பணியாளர்களும் சிறப்பாக உம் சேவையில் ஈடுபட வரம்தந்து காத்து ஆசீர்வதித்து, வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment