Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 13 November 2015

இன்றைய புனிதர் 2015-11-13 ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா, சேசு சபை Stanislaus Kostka SJ


பிறப்பு28 அக்டோபர் 1550,மசோவீன் Masovien, போலந்து



இறப்பு15 ஆகஸ்ட் 1568,உரோம், இத்தாலி

இவர் தனது பெற்றோரால் சரியான முறையில் கவனிக்கப்படாமல் இருந்தார். இவர் தன்னுடைய உடன் பிறந்த சகோதரருடன் 1564 ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவில் கல்லூரியில் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். அப்போது அவரின் வயது 14. தனது இளம்வயதிலேயே இயேசு தன்னுடன் உரையாடுவதை உணர்ந்தார். இயேசு தன்னை துறவற வாழ்வை வாழ அழைப்பதாக உணர்ந்ததால் துறவற இல்லம் ஒன்றை நாடி சென்றார். இதனால் அவரின் தந்தை கடுங்கோபம் கொண்டு, அவரை கண்டித்தார். இருப்பினும் இயேசுவின் குரலுக்கு மட்டுமே ஸ்தனிஸ்லாஸ் செவிமடுத்தார்.



இவர் 14 ஆம் வயதில் முதன்முறையாக பெற்ற திருக்காட்சியில் பிச்சைக்காரனைப்போல் உடை உடுத்தி, வியன்னாவைவிட்டு, ஆக்ஸ்பூர்க் வருமாறு கூறிய குரலைக்கேட்டார். அக்குரல் கூறியதை செய்ததின் பேரில் டில்லிங்கன் (Dillingen) வந்து சேர்ந்தார் ஸ்தனிஸ்லாஸ். அப்போது அவர் அங்கிருந்து உரோமில் உள்ள இயேசு சபை மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போர்ஜிய நகர் பிரான்சு (Franz von Borjia) அச்சபையின் தலைவராக இருந்தார். அவர் ஸ்தனிஸ்லாசை அவரின் 17 ஆம் பிறந்தநாளன்று தன் சபையில் நவத்துறவகத்தில் சேர்த்தார்.

ஸ்தனிஸ்லாஸ் மிகக் குறைந்த நாட்களிலேயே நவத்துறவக மாணவர்களாலும், குருக்களாலும் கவரப்பட்டு அன்புச் செய்யப்பட்டார். இவர் எப்போதும் மகிழ்ச்சியானவராகவும், உடனடியாக எதையும் எதிர்பாராமல் தேவையில் இருப்போருக்கு குறிப்பறிந்து உதவி செய்பவராகவும் இருந்தார். இவருக்கு மிக அருமையான எதிர்காலம் இருக்கும் என்று உடன் இருந்தவர்கள் அனைவரும் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால் அனைத்தும் அதற்கு எதிர்மாறாக நடைப்பெற்றது. இவர் இயேசு சபையில் சேர்ந்த பத்தே மாதங்களில், கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்டார். அக்காய்ச்சலை குணப்படுத்தமுடியாமல் இறந்து போனார். இவர் இறப்பதற்கு முந்தின நாள், நாளை நான் இறந்துவிடுவேன் என்பதை தன்னுடன் இருந்தவர்களை நோக்கி கூறினார். அவர் சொன்னவாறே ஆண்டவரிடத்தில் சேர்ந்தார்.


செபம்:
அருள் ஒவ்வொன்றின் ஊற்றாகிய இறைவா! புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்காவை, வியத்தகு முறையில் வளர்த்தெடுத்தீர். அவரின் நற்குணங்களை ஒவ்வொரு நவத்துறவு மாணவ மாணவிகளும் முன்மாதிரியாக கொண்டு வாழ உதவி செய்யும். நாங்கள் அவரின் தூய வாழ்வை பின்பற்ற தவறினாலும், அவரின் குணநலன்களையேனும் கண்டுபாவிக்க அவருடைய பரிந்துரை வழியாக எங்களுக்கு வரம் அருள்வீராக!

No comments:

Post a Comment