Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 6 November 2015

இன்றைய புனிதர் 2015-11-06 லிமோகெஸ் நகர் துறவி லியோனார்ட் Leonhard von Limoges


பிறப்பு5 ஆம் நூற்றாண்டு,பிரான்சு


இறப்பு559 (?)லிமோகெஸ் Limoges, பிரான்சு

பாதுகாவல்: விவசாயிகள், வீட்டு விலங்குகள், குதிரைகள், சிறைக்காப்பாளர்கள், பழ வியாபாரிகள், மலைவாழ் மக்கள்

இவரின் வரலாற்றைப் படிக்கும்போது, இவர் ஓர் உயர்தர குடும்பத்தைச் சார்ந்தவர் என்று அறியப்படுகின்றது. இவர் ஆயர் ரெமிஜியுஸ் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தான் குழந்தையாக இருக்கும் போதும், இளமைப்பருவத்திலிருக்கும்போதும், தன்னை துறவி என்று கூறி வந்துள்ளார். இவர் தனிமையாக காட்டில் வாழ்ந்துள்ளார். காட்டை சுற்றி வாழ்ந்த மக்களால் இவர் புனிதர் என்று போற்றப்பட்டுள்ளார்.

இவர் அரசாங்கத்தால் சிறைபிடித்து செல்லப்பட்ட மக்களிடத்தில் தனி அன்பு கொண்டு வாழ்ந்துள்ளார். சிறைவாழ் மக்கள் இவரை "தங்களின் அரசர்" என்று கூறியுள்ளனர். இவர் காட்டில் தன்னுடைய சிறிய குகையில் வாழ்ந்துக்கொண்டே துறவற மடம் ஒன்றையும் கட்டியுள்ளார். இவரின் புனிதமான வாழ்வைக் கண்ட சிலரும், இவரை பின்பற்றியுள்ளனர். இவர் தன்னை பின்பற்றிய மக்களுக்கென்று சபை ஒன்றை நிறுவி, அச்சபையின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையானது, இன்று திருயாத்திரை தலமாக காட்சியளிக்கின்றது.


செபம்:
படைப்பின் பரம்பொருளே! இன்று காட்டில் வாழும் மக்கள் அனைவரையும் உம் கரத்தில் அர்ப்பணிக்கின்றோம். உமது இயற்கையை நேசித்து, அன்பு செய்து இயற்கையின் வழியாக உம்மைக் காணும் அம்மக்களை எல்லாவித ஆபத்துக்கள் இயற்கையின் சீற்றங்கள் அனைத்திலிருந்தும் காத்து, நல்வாழ்வை வாழ வரம் தந்து காத்திட வேண்டுமென்று மூவொரு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment