Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 24 November 2015

இன்றைய புனிதர் 2015-11-24 மறைசாட்சி கிறிசோகோனுஸ் Chrysogonus


பிறப்பு3 ஆம் நூற்றாண்டு,உரோம், இத்தாலி


இறப்பு303அக்குயிலேயா Aquileja, இத்தாலி

இவர் ஓர் சிறந்த கத்தோலிக்கர். ஏறக்குறைய 300 ஆம் ஆண்டு அரசி அனஸ்தாசியாவின் (Anastasia)ஆசிரியராக பணியாற்றினார். இவர் எப்போதும் கிறிஸ்துவை பின்பற்றி வாழ்ந்தார். இதனால் தியோக்ளேசியன்(Diokletion) என்ற அரசனால் வதைக்கப்பட்டார். பின்னர் அக்குயிலேயாவிற்கு பிடித்துகொண்டு போகப்பட்டார். அங்கு அவரின் நம்பிக்கையை அரசன் தியோக்ளேசியன் சோதித்தார். கிறிஸ்துவை பின்பற்ற தடைவிதித்தான். ஆனால் அனைத்து தடைகளையும் மீறி கிறிசோனோலுஸ் கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் அரசன் சினங்கொண்டு அவரை கொன்றான்

செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான இறைவ! உம்மை பின்பற்றியதற்காக தன் உயிரை ஈந்த கிறிசோகோனுஸ்சின் பக்தியையும், விசுவாசத்தையும் நாங்களும் பின்பற்றி வாழ எமக்கு உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment