Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 6 November 2015

இன்றைய புனிதர் 2015-11-07 குரு வின்செண்ட் குரோசி Vinzenz Grossi


பிறப்பு 9 மார்ச் 1845,
இறப்பு 7 நவம்பர் 1917,விகோபெல்லிக்னானோ Vicobellignano, இத்தாலி


முத்திபேறுபட்டம்: 1 நவம்பர் 1975, திருத்தந்தை 6 ஆம் பவுல்

வின்செண்ட் குரோசி தன்னுடைய இளம் வயதிலேயே, பள்ளியில் கற்கும்போது, தன்னுடன் படித்த சக மாணவர்கள் வியக்கும் வகையில் அனைவரையும் சிரிக்கவைப்பார். தினமும் தவறாமல் ஆலயத்திற்கு சென்று, பங்குத்தந்தைக்கு உதவி செய்து வந்தார். தன் கல்வியை முடித்தப்பிறகு, 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் நிறைந்த பங்கிற்கு அனுப்பப்பட்டார். அப்பங்கில் பல துன்பங்களை அனுபவித்தார். தகாத சொற்களால் அவமானப்படுத்தப்பட்டார். இருப்பினும் இவர் தன்னம்பிக்கையை இழக்காமல் அம்மக்களின் ஒற்றுமைக்காகவும், நலமான வாழ்வை சுமூகமான உறவை கொண்டு வருவதற்காகவும் அயராது உழைத்தார். இவரின் செயல்களை கண்டு அப்பங்கு மக்கள் அருட்தந்தைக்கு உதவினர். தங்களிடையே இருந்த எல்லாப் பிரச்சனைகளையும் அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொண்டனர். பின்னர் வின்செண்ட் அம்மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காக காரிதாஸ் அமைப்பு ஒன்று ஏற்படுத்தினார். அவ்வமைப்பின் வழியாக சமூகப்பணிகளிலும் ஈடுபடவைத்தார். அதன்பிறகு இளைஞர்களுக்காக பல மன்றங்களையும் நிறுவி சிறப்பாக தன் மறைப்பணியை ஆற்றினார்.



செபம்:
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறிய இயேசுவே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் சாதித்து வாழ நினைக்கும் மனதைத் தாரும். தான் பிறந்த வீட்டிற்கும், நாட்டிற்கும் தாயாம் திருச்சபைக்கும், நல்ல பிள்ளைகளாக வாழ வாழ்ந்திட ஆசீர்வதியும், சமுதாயத்தை அழிப்பவர்களாக வளராமல், வாழ வைப்பவர்களாக மாறி வாழ வரம் தந்திட வேண்டுமென்று அருட்தந்தை வின்செண்ட் குரோசி வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment