Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 21 November 2015

இன்றைய புனிதர் 2015-11-21 திருத்தந்தை முதலாம் கெலாசியுஸ் Pope Gelasius I


பிறப்பு5 ஆம் நூற்றாண்டு,ஆப்ரிக்கா(?)


இறப்பு 21 நவம்பர் 496, உரோம் இத்தாலி

இவர் ஆப்ரிக்கா நாட்டு கறுப்பினத்தைச் சார்ந்தவர். இவர் மிக சிறு வயதில் குருவானார் என்று கூறப்படுகின்றது. 483 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தை 2 ஆம் பெலிக்ஸ்சுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் மிக சிறந்த விதத்தில் திருத்தந்தைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். திறமையான, அர்த்தமுள்ள முடிவுகள் எடுப்பதில் இவர் வல்லவராக திகழ்ந்தார். இறையியலாளர்கள் பலர் இவரின் ஆலோசனையை நாடி வந்தனர். திருத்தந்தை 2 ஆம் பெலிக்ஸ் 1 மார்ச் 492 ஆம் ஆண்டு இறந்துவிடவே கெலாசியுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தழைத்தோங்கி இருந்த அரசர்களின் ஆட்சியை முறியடித்து திருச்சபையில் கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். கிறிஸ்துவின் நற்செய்திக்கு முதலிடம் கொடுத்தார். ஏழை மக்களின் வாழ்வுக்கென்று பல மையங்களை ஏற்படுத்தினார். திருச்சபை சொத்துகளில் நான்கில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுத்தார். இவர்தான் வாழ்ந்து வளர்ந்த ஏழ்மையை என்றும் மறவாமல் இறுதிவரை வாழ்ந்தார். ஏழைகளுக்கென்று தன் ஆட்சியில் தனி இடம் ஒதுக்கினார். அம்மக்களின் ஈடேற்றத்திற்காக இரவும் பகலும் அயராது செபித்தார். இயேசு வாழக்கூறிய அன்பான வாழ்வை வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இவர் திருச்சபையில் பல சீர்த்திருத்தங்கலை கொண்டுவந்தார். இவர் திருப்பலி பூசை புத்தகத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இவர் இறந்தபிறகு உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பதை கண்டறிய இயலவில்லை.


செபம்:
அனைவருக்கும் இரக்கம் காட்டும் அன்புத் தந்தையே! திருச்சபையின் தலைசிறந்த மனிதராக திருத்தந்தை முதலாம் கெலாசியுஸை மாற்றினீர். இவரின் வேண்டுதலால் நாங்கள் எங்களுடைய திறமைகளை பயன்படுத்தி என்றும் எம் தாயாம் திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைத்திட வரமருள வேண்டுமென்று தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment