Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 30 November 2015

இன்றைய புனிதர் 2015-11-30 திருத்தூதர் அந்திரேயா Apostel Andreas

                                         

பிறப்புகிறிஸ்து பிறந்த ஆண்டு,பெத்சயிதா, கலிலேயா

இறப்புநவம்பர் 60 அல்லது 62,பாட்ரஸ் Patras, கிரேக்கம்

பாதுகாவல்: ஸ்காட்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், கிரேக்கம், சிசிலி, ஆஸ்திரியா, பெரு, நேயாப்பல், மீன்பிடிப்பவர்கள், திருமண தம்பதியர், தொண்டைவலியிலிருந்து, வலிப்பு நோயிலிருந்து

இவர் தன் சகோதரர் சீமோனுடன் வாழ்ந்து வந்தார். இவர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் திருமுழுக்கு யோவானின் சீடராயிருந்தார். அதன்பிறகு கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் இவர் இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீடர் என்ற பெயரைப் பெற்றார். இவரே தன் சகோதரர் சீமோன் பேதுருவையும் இயேசுவிடம் அழைத்துவந்தார். என்னை பின் சென்று மனிதரை பிடிப்பவராகுங்கள் என்று இயேசு இவர்களிடம் கூறி தன் சீடராக்கினார். நற்செய்தி அறிவிக்கும் பணியை இயேசுவிடமிருந்து பெற்றிருந்தார்.

இவர் கருங்கடல் வழியாக சென்று கிரேக்க நாட்டில் நற்செய்தியை போதித்தார். சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து மறைப்பணியாற்றினார். பாட்ரசில் நற்செய்தியை உரைக்கும்போது எதிரிகளால் பிடிக்கப்பட்டார். ஏறக்குறைய 60 ஆம் ஆண்டு மன்னன் நீரோ ஆட்சிபுரிந்தான். அவன் அந்திரேயாவை நற்செய்தியை பறைசாற்றியதற்காக சிலுவையில் அறைந்து கொன்றான் என்று கூறப்படுகின்றது.


செபம்:
மாட்சிமிக்க ஆண்டவராகிய கடவுளே! உமது திருத்தூதரான புனித அந்திரேயாவை நற்செய்தியை போதிக்கவும் உமது திருச்சபையை வழிநடத்தவும் அழைத்தீர். அவர் எங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசுபவராக திகழ நாங்கள் உம்மை தாழ்மையாய் வேண்டுகின்றோம்

No comments:

Post a Comment