Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 29 September 2015

இன்றைய புனிதர் 2015-09-30 மறைவல்லுநர் ஹிரோனிமூஸ்(ஜெரோம்) St. Jerome



பிறப்பு347,ஸ்டீரிடன்(Stridon), டல்மாத்தியா(Dalmatia) குரோசியா

இறப்பு30 செப்டம்பர் 419 / 420, பெத்லஹேம், பாலஸ்தீனா 

  பாதுகாவல்: விவிலிய அறிஞர்கள், நூலகர்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள்

இவரின் தந்தை ஓர் கிறிஸ்துவர். இவரை ரோம் நகருக்கு அனுப்பி, இவரின் தந்தை ஜெரோமை படிக்கவைத்தார். இவர் இலக்கணத்தை நன்றாக கற்றார். லத்தீன் மொழியையும், கிரேக்க மொழியையும் சரளமாக கற்றுத் தேர்ந்தார். அம்மொழியிலேயே பல நூல்களை படித்தார். ஜெரோம் 360 ஆம் ஆண்டு திருத்தந்தை லிபேரியஸ்(Liberius) என்பவரிடம் திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவராக மாறினார். இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், தவறாமல் தன் நண்பர்களுடன், மறைசாட்சியர்கள் மற்றும் திருத்தந்தையர்களின் கல்லறையும் சந்தித்து, செபித்து வந்தார். அருங்காட்சியகங்களுக்கு சென்று, அவர்களின் வரலாற்றை வாசித்தார்.

மூன்று ஆண்டுகள் வரலாற்றைப் படித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டார். பின்னர் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, அக்குயிலா(Aquileia) என்ற நாட்டிற்கும் மற்றும் பல அயல்நாடுகளுக்கும் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர் தன் நண்பர் போனோசாஸுடன்(Bonosus) சேர்ந்து, டிரேவஸ்(Treves) நகரிலிருந்த ஒரு துறவற சபையை சந்தித்து, அச்சபையில் தங்கி, மீண்டும் தன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அப்போது அத்துறவிகளின் வாழ்வு இவரை கவரவே, தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணிக்க எண்ணினார். அதன்பிறகு கத்தோலிக்க் நூலகம் ஒன்றை நிறுவினார். அப்போது புனித ஹிலாரியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ஒன்று இவருக்கு கிடைத்தது. அப்புத்தகத்தை படித்தபின் இவர் மீண்டும் தனது சொந்த ஊரான ஸ்டீரிடன்னிற்கு திரும்பினார்.

அங்கு சில நாட்கல் மாணவர்களுடன் தங்கியிருந்தார். அம்மாணவர்களுக்கு கல்லூரியில் கற்றுக்கொடுத்தார். பின்னர் 373 ஆம் ஆண்டு ஏதென்ஸ், பித்தினியா, கலாத்தியா, பொந்து, கப்பதோக்கியா மற்றும் சிலிசியா என்ற நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கல்லூரிகளில் கற்றுக்கொடுத்தார். பின்னர் அந்தியோக்கியா சென்று மறையுரை ஆற்றினார். இம்மறையுரை மிகவும் புகழ்பெற்றது. ஜெரோம் அந்தியோக்கிவிலேயே தங்கி மறைப்பணியை செய்தார். அப்போது உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டார். பாலைநிலத்தின் வெப்பம் இவரால் தாங்க முடியவில்லை. இருப்பினும் இறைவேண்டல் செய்து, மீண்டும் நல்ல உடல் நலம் பெற்றார். ஜெரோம் 380 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிஸ் சென்று, அங்கு விவிலியத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர் பல புத்தகங்களை எழுதி, கிறிஸ்தவ வாழ்வையும், மறைபரப்பு பணியையும் செய்தார். சிறப்பான பணியை செய்த ஜெரோம் மீண்டும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

No comments:

Post a Comment