Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 17 October 2015

இன்றைய புனிதர் 2015-10-18 நற்செய்தியாளர் லூக்கா Aposle & Evangelist Lucas


பிறப்புஅந்தியோக்கியா, சிரியா


இறப்பு1 ஆம் நூற்றாண்டு,கிரேக்கம்

பாதுகாவல்: பொலோனியா நகர், பதுவை நகர், மருத்துவர்கள், ஓவியர்கள், வக்கீல், புத்தகம் வெளியிடுவோர்

இவர் ஒரு புறவின இனத்தைச் சார்ந்தவர். இருப்பினும் திருமுறைக்கு மனந்திரும்பினார். புனித பவுலுடன் சேர்ந்து திருத்தூதுரைப் பயணம் மேற்கொண்டார். புனித பவுலின் போதனைக்கு ஏற்ப நற்செய்தி ஒன்றை எழுதியுள்ளார். பின்னர் திருத்தூதர்பணி என்னும் விவிலிய நூலையும் எழுதியுள்ளார். அதில் பவுல் முதன்முறையாக உரோமையில் தங்கிருந்ததுவரை நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை குறிப்பிட்டுள்ளார். புனித பவுல் லூக்காவை மருத்துவர் என்று குறிப்பிட்டார். லூக்கா தான் எழுதிய நற்செய்தியில், ஏழை மக்களுக்கு மிக முக்கியத்துவம் தந்துள்ளார்.

செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! ஏழைகள் மீது உமக்குள்ள அன்பின் மறைப்பொருளை தமது மறையுரையாலும், எழுத்தாலும் வெளிப்படுத்த, புனித லூக்காவைத் தேர்ந்தெடுத்தீர். கிறிஸ்துவர்களாகிய நாங்கள் ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டு, உம்மீது அன்புகொண்டு, ஏழைகளை என்றும் ஏற்று வாழ, வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

1 comment: