Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 8 September 2015

இன்றைய புனிதர் 2015-09-09 துறவி மரியா எத்திமியா Maria Euthymia


பிறப்பு  8 ஏப்ரல் 1914, ஹால்வேர்தா, நார்ட்ரைன் வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி

இறப்பு9 செப்டம்பர் 1955,மியூண்டர், நார்ட்ரைன் வெஸ்ட்ஃபாலன், ஜெர்மனி

இவர் 1934 ஆம் ஆண்டு இரக்கத்தின் அருள்சகோதரர்கள் Barmherzigen Schwestern என்ற துறவற சபையில் சேர்ந்து 1940 ல் துறவியானார். இவர் தனது வார்த்தைப்பாடுகளை பெற்ற பின்னர், இரண்டாம் உலகப் போரில் அடிப்பட்ட மக்களுக்காக பணியாற்றினார். நோயாளிகளை அன்புடன் பராமரித்தார். போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் மனதில், மகிழ்ச்சியை வளர்க்க பெரிதும் உழைத்தார். இவர் தன்னுடைய அன்பான பேச்சாலும், அரவணைக்கும் இதயத்தாலும், பாதித்த மக்களின் வாழ்வை மாற்றினார். சோக வாழ்விலிருந்து விடுபட்டு, சுமுகமான வாழ்வுக்கு வழிகாட்டினார்.

இவர் மக்களால் "அன்பின் வானதூதர்" என்றழைக்கப்பட்டார். தன்னுடைய அன்பான புன்முறுவலுடன் வாழ்வில் எதுவுமே இல்லை என்று வாழ்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கினார். அனைவருக்கும் தன் முழு அன்பை வழங்கினார். ஏராளமான மக்களின் வாழ்வில் நம்பிக்கையை வளர்த்து நல்வாழ்வை அமைத்துக்கொடுத்தார்

No comments:

Post a Comment