Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 17 September 2015

இன்றைய புனிதர் 2015-09-18 புனித ஜோசப் கப்பர் Joseph of Cuper குரு, திருக்காட்சியாளர்


பிறப்பு 1603,பிரிந்திசி Brindisi, அப்போலியன் Apulion

இறப்பு18 செப்டம்பர் 1663


முத்திபேறுபட்டம்: 24 பிப்ரவரி 1753, திருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம்: 16 ஜூலை 1767, திருத்தந்தை 13 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: விமான போக்குவரத்து, விண்வெளி, மாணவர்கள்


இவரின் பெற்றோர் பிரான்செஸ்கா பானரா Francesca Panara மற்றும் பெலீஸ் டேசா Felice Desa என்பவர்கள் ஆவார். இவர் பிறப்பதற்கு முன்பே இவரின் தந்தை இறந்துவிட்டார். தந்தை ஏற்படுத்திய கடனை இவரின் தாயால் அடைக்கமுடியவில்லை. இதனால் தாயிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் கடன்காரர்கள் அபகரித்து சென்றார்கள். இதனால் இவரின் தாய், மகன் ஜோசப்பை கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தார். இளம் வயதிலிருந்தே ஜோசப்பிற்கு, தாய் ஞானப்பாலை ஊட்டி வளர்த்தார். இறைபக்தியில் வளர்ந்த ஜோசப், சிறுவயதிலிருந்தே இறைதரிசனங்களை பெற்றார்.

ஜோசப் பல நல்ல குணங்களை பெற்று வளர்ந்தார். இருப்பினும் கோபம் என்னும் குணமும் இவரோடு வளர்ந்தது. இதனால் துன்பங்களுக்கும் ஆளானார். இவரும் இவரின் தாயும் துன்பப்படுவதை அறிந்த இவரின் மாமா ஜோசப்பை தன்னுடன் அழைத்து சென்றார். இவர் செய்த ஷூமேக்கர் தொழிலை ஜோசப்பிற்கும் கற்றுக்கொடுத்தார். அத்தொழிலை செய்தபோதும், ஜோசப்பின் மனம் குருவாக வேண்டுமென்ற ஆசையை கொண்டிருந்தது. இதனால் 1620 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையினர் நடத்திய சிறுவர்களின் பள்ளியில் சேர்ந்து படித்தார். ஆனால் போதுமான கல்வியை அவரால் கற்கமுடியவில்லை. இருப்பினும் குருவாகும் ஆசையை விடாமல் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். அங்கு வாழ்ந்தபோது, பல பயிற்சிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் சில தகுதிகள் அவரிடம் இல்லையென்பதை உணர்ந்த அச்சபையினர் அவரை வெளியில் அனுப்பினர். தன் வீட்டிற்கு சென்று வாழ்ந்தபோது 1625 ஆம் ஆண்டு, அவர் வாழ்ந்த மறைமாவட்டத்திலிருந்த குருத்துவ இல்லம் சென்று, தன் ஆசையை அம்மறைமாவட்ட குருக்களிடம் தெரிவித்து குருமடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். எளிமையிலும், பக்தியிலும் வாழ்ந்து 1628 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் குருப்பட்டம் பெற்றார்.

பிறகு மடோனாடெல்லா கிராசியா Madonna della Grazia என்ற ஆலயத்தில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு ஜோசப் பலமுறை கடவுளின் காட்சிகளை பெற்றார். பல மணிநேரங்கள் தொடர்ந்து தன்னை மறந்து செபித்தார். இவர் திருப்பலி நிறைவேற்றிய ஒவ்வொரு நாளும் மக்கள் இவரின் புனிதத்துவத்தை உணர்ந்தனர். இவர் மனிதர்களை பார்த்தவுடனே அவர்களின் மனதில் உள்ளவற்றை அப்படியே கூறுவார். இதனால் சில நேரங்களில் இவர் கட்டுக்கதைகளைக் கட்டுகிறார் என்று கூறி சிறைப்பிடித்து கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் பிரான்சிஸ்கன் சிறுவர் இல்லத்திற்கு மாற்றப்பட்டார். 1639-1653 வரை அவ்வில்லத்தில் பணியாற்றினார். அங்கும் பலமுறை காட்சிகளை கண்டார். 1653-1657 வரை வாரத்திற்கு இருமுறை மட்டுமே உணவு உட்கொண்டு கடுமையான தவ வாழ்வை கடைபிடித்தார். இவ்வாறே 35 ஆண்டுகள் வாழ்ந்தார்.

No comments:

Post a Comment