Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 13 September 2015

இன்றைய புனிதர் 2015-09-13 புனித யோவான் கிறிசோஸ்தோம் ஆயர், மறைவல்லுநர்


பிறப்பு 354,அந்தியோக்கியா

இறப்பு 407,கோமானா, போந்து

பாதுகாவல்: கல்வி, வலிப்புநோய், மறையுரையாளர்கள்

இவர் ஓர் சிறந்த மறைபோதகர். மிகச் சிறந்த முறையில் கல்வி கற்றார். இவர் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு குருத்துவப்பயிற்சி பெற்று குருவானார். மறைபோதகராக பணியாற்றி, ஏராளமான நன்மைகளை செய்தார். 397 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோபிளுக்கு ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்பை மிக சிறப்பாக ஆற்றினார். பணிகளின் நடுவிலும் தவ வாழ்வை விடாமல் மேற்கொண்டார். குருக்களின் நடத்தையும் மறைபணியாளர்களின் வாழ்வையும் அறநெறிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அரசர்களாலும், தனக்கு எதிராக செயல்பட்டவர்களாலும் அதை நிறைவேற்ற முடியாமல் தவித்தார்.

இவர் நாட்டைவிட்டு வெளியேற அரசர்களால் வலியுறுத்தப்பட்டார். இருப்பினும் அம்மக்களின் நடுவே அஞ்சா நெஞ்சுடன் பணியாற்றினார். தன் சொல்வன்மையால் பலரின் மனதில் இடம்பிடித்தார். ஆடம்பர வாழ்விலிருந்து வெளியேறி ஏழைமக்களுக்கு பணிசெய்து, தன்னிடம் இருப்பவற்றை அவர்களோடு பகிர்ந்து அரசர்களை அழைத்தார். இதனால் வெறிகொண்ட அரசர்கள் அவரை நாடு கடத்தினர். ஆர்மினியா நாட்டில் 3 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் கருங்கடலின் தென்கிழக்கு பகுதிக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டார். மிகவும் நலிவுற்று உடல் நலம் குன்றி காணப்பட்டார். ஒன்றும் செய்ய இயலாதவராய் அங்கேயே இறந்தார்.

No comments:

Post a Comment