Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 26 September 2015
இன்றைய புனிதர் 2015-09-27 புனித வின்சென்ட் தெ பால் St.Vincent de Paul, Priest and Founder
முத்திபேறுபட்டம்: 13 ஆகஸ்டு 1729, திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட்
இவர் ஓர் ஏழ்மையான கிராமத்தில் ஏழைப் பெற்றோர்களின் மகனாக பிறந்தார். பிரான்சிஸ்கன் சபையை சார்ந்த குருக்களின் பள்ளியில் தனது கல்வியை கற்றார். இவர் மிகவும் நன்றாக படித்ததால், பணம் எதுவும் பெறாமல், குருக்கள் இவரை படிக்க வைத்தனர். இதனால் தனது பெற்றோரின் சுமையை சிறிதளவு நீக்கினார். 1596 ஆம் ஆண்டு தூலூஸ் (Toulouse) என்ற நகரிலிருந்த பல்கலைக்கழகத்தில் தனது இறையியல் படிப்பை கற்கசென்றார். படிப்பை முடிந்ததும் 1600 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பிறகு 1605 ஆம் ஆண்டு தூனிஸிருந்து (Tunis) அடிமைகளாக கடத்திக் கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பணியாற்ற அனுப்பப்பட்டார். அப்போது இவரும் அடிமையாக பிடித்துக்கொண்டு போகப்பட்டார். இரண்டு ஆண்டுகள் வின்செண்ட் அம்மக்களின் பிடியிலிருந்தார். பின்னர் இம்மானுவேல் டி கோண்டி(Emmanuel de Gondy) என்பவரிடமிருந்து, கடிதம் வரவே, அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் பிரான்சு நாட்டிற்கு திரும்பினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment