Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 22 September 2015
இன்றைய புனிதர் 2015-09-23 புனித தெக்ளா St. Thecla
இவர் 2 ஆம் நூற்றாண்டில் புகழ்வாய்ந்தவராக கருதப்படுகின்றார். புனித பவுலின் வாழ்க்கையை பற்றி பறைசாற்றியுள்ளார். தியாமிரீஸ் Thamyris என்பவருடன் திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்ததை அறிந்த இவர், தன் கன்னிமையை காத்துக்கொள்ள அவரிடமிருந்து தப்பித்து சென்றார். பவுலை பற்றி தீர்க்கமாக போதித்ததால் எரித்து கொல்லப்பட உத்தரவிடப்பட்டது. இவர் பலமுறை, பவுலைப் போலவே, சாட்டையடிகளையும் பெற்றுள்ளார். இருப்பினும் கிறிஸ்துவை பவுலின் வாழ்க்கை வழியாக பரப்புவதில் இவரின் மனம் கொழுந்துவிட்டு எரிந்தது. போதனைப் பணியை தொடர்ந்ததால் சிரியாவை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர், இவரை நாடு கடத்தி சென்றார். அங்கு கொடிய காட்டு மிருகங்களின் நடுவே, அவரை விட்டான். ஆனால் அந்த மிருகங்கள் ஒன்றும் செய்யாமல்விட்டது. பின்னர் அங்கிருந்து தப்பி லிசியாவிலுள்ள (Lycia) மிரா (Myra) என்ற பகுதிக்கு சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment