Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 10 September 2015
இன்றைய புனிதர் 2015-09-10 புனித அல்பி சால்வியன் St. Salvius of Albi
இறப்பு 584
இவர் அல்பி என்ற நகரில் ஆயராக இருந்தார். திருத்தந்தை முதலாம் பெரிய கிரகோரியின் (Pope Gregory I) நண்பர். இவரின் சொந்த ஊரான அல்பியில் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பிறகு ஒரு துறவு மடத்திற்குள் நுழைந்து, துறவியாகவே பணியாற்றினார். அதன்பிறகு துறவியானார். அதன்பிறகு அத்துறவற மடத்துறவிகளை கவனிப்பதற்கான பொறுப்பை ஏற்றார். பின்னர் 574-584 வரை அல்பியிலுள்ள மக்களின் ஆயனாக ஆயர் பதவி வகித்தார். அங்கு நோயாளிகளை கவனிக்கும் பணியிலும் ஈடுபட்டார். அங்கிருந்த கைதிகளை மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் வாழ்வையும் மாற்றினார். அரசர் சில்பெரிக்(King Chilperic) என்பவரையும் மனம் மாற்றி கிறிஸ்துவ நெறியில் வளர்த்தெடுத்தார்.
No comments:
Post a Comment