Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 16 September 2015

இன்றைய புனிதர் 2015-09-16 கார்த்தேஜ் நகர் ஆயர் மறைசாட்சி சிப்ரியான், ஆயர், St.Cyprian


பிறப்பு 200 / 210, கார்த்தேஜ் Carthage, ஆப்ரிக்கா

இறப்பு  258,  கார்த்தேஜ்

பாதுகாவல்: காலரா நோயிலிருந்து

இவர் ஓர் கிறிஸ்தவர் அல்லாதவரின் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலிருந்தே கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமென்று ஆசைக்கொண்டு, குடும்பத்தினரின் உதவியுடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். திருவருட்சாதனங்களை பெற்று, திருமறையைப் பற்றி நன்கு அறிந்தார். பின்னர் தான் பிறந்த ஊரிலே இருந்த குருமடத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். சிறந்த மறைபரப்புப் பணியாளராக பணியாற்றினார். தன் குடும்பத்திலிருந்து இவருக்கு ஏராளமான சொத்துக்களை வழங்கினர். அவற்றையெல்லாம் விற்று, வேறுபாடு பார்க்காமல் பணியாற்றினார்.

இவர் 249 ஆம் ஆண்டு இவரின் சொந்த மறைமாவட்டத்திற்கே ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு பிரச்சனைகள் நிறைந்திருந்தபோதும், திறம்பட தம் பணியை ஆற்றினார். பல அரசர் இவருக்கு எதிராக செயல்பட்டனர். அவர்களிடமும் இறைநம்பிக்கையை வளர்த்து கிறிஸ்துவர்களாக மாற்றினார்.

இச்செயல்களை கண்ட பல கிறித்தவரல்லாதவர்கள் சிப்ரியானின் செயல்களை எதிர்த்தனர். கிறிஸ்துவர்களை பலவிதங்களில் வதைத்துக்கொன்றனர். சில மக்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து பிரிந்து புறவின சபையில் சேர்ந்தனர். அவர்களின் பயத்தைப் பார்த்து, சிப்ரியான் கிறிஸ்துவர்களாக வாழ தைரியமூட்டி கிறிஸ்துவை பற்றிக்கொள்ள இன்னும் சிறப்பாக குரல் கொடுத்து பணியாற்றினார். இதனால் டீசியன் (Disiyan) என்ற மன்னன் ஆத்திரமடைந்து, சிப்ரியானை சிங்கங்களின் வாயிலிட்டு கொல்லும்படி கட்டளையிட்டான். அதை அறிந்த சிப்ரியான் அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பித்து சென்றான்.

அப்போது அம்மறைமாநிலத்தில் ஆயர் இல்லாமல் போனது. இதனை அறிந்த நோவெற்றஸ் (Nowetras) என்பவன் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்துவை மறுதலித்தவர்களை, தன்னுடன் சேர்த்துக்கொண்டு, திருச்சபையில் இருந்துக்கொண்டே, திருச்சபைக்கு எதிராக செயல்பட்டான். உரோம் நகர் சென்று, அங்கும் தவறான வதந்திகளை பரப்பினான். இதையறிந்த சிப்ரியான் மனங்கலங்கினார். மீண்டும் கார்த்தேஜ் வந்தடைந்தார். அப்போது சில கூட்டங்களை கூட்டி திருச்சபையில் சில நிலையான தீர்மானங்களை கொண்டுவந்தார். 257 ஆம் ஆண்டு மீண்டும் சிலைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனை சிப்ரியான் எதிர்த்தார். இதனால் பட்டேனஸ்(Patenas) என்ற ஆளுநர் ஒருவரால் நாடு கடத்தப்பட்டார். அப்போதும் இவர் கிறிஸ்துவ மக்களுக்காக மட்டுமே பரிந்து பேசினார். அதனால் மீண்டும் வலேரியன் என்பவனால் மீண்டும் நாடு கடத்தப்பட்டு, கடுமையான தண்டனையை அளித்தார். பல துன்பங்களை அனுபவித்தார் ஆயர். அப்போதும் கூட ஆப்ரிக்கா மண்ணில் வாழும் கிறிஸ்துவர்களுக்காக பரிந்து பேசி, குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் பெயரை உச்சரித்தவண்ணமாய் இருந்தார். இதனால் தலை வெட்டப்பட்டு இறந்தார்.

No comments:

Post a Comment