Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 24 September 2015
இன்றைய புனிதர் 2015-09-25 புனித ஜியோன்னா ஆல்பர்ட் St. Albert of Geona
ஆல்பர்ட் ஓர் உன்னத குடும்பத்தில் பிறந்தார். திருச்சிலுவை(Holy Cross) என்ற சபையில் குருவானார். 1184 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிலுள்ள பிப்பியோ (Bibbio) என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1205 ஆம் ஆண்டு எருசலேமில் உள்ள கிறிஸ்துவ மக்களின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அம்மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்தார். அந்நாட்டில் கிறிஸ்துவ மக்கள் அரசரின் கீழ் அடிமைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். 1187 ஆம் ஆண்டு பேரரசரிடமிருந்து அம்மக்களை விடுவித்து, விடுதலை வாழ்வை வழங்கினார். அன்றிலிருந்து எருசலேம் கிறிஸ்துவர்கள் அமைதியாக வாழ்ந்தனர். சில ஆண்டுகளில் மீண்டும் அம்மக்கள் முஸ்லீம்களின் கையில் அகப்பட்டனர். ஆல்பர்ட் அம்மக்களை மீண்டும் முஸ்லீம்களிடமிருந்து விடுவித்து சுதந்திரத்துடன் அமைதியாக வாழ வழிவகுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment