Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 4 January 2016

இன்றைய புனிதர் 2016-01-04 போலினோ நகர் திருக்காட்சியாளர் ஆஞ்சலா Angela von Foligno OFM

                                                    

பிறப்பு 1248, போலினோ Foligno, இத்தாலி

இறப்பு4 ஜனவரி 1309,போலினோ

முத்திபேறுபட்டம்: 1693

இவர் ஓர் திருமணமானப் பெண். பல குழந்தைகளின் தாய். இவர் கள்ளம் கபடமற்ற மனம்கொண்டு எளிமையான வாழ்வு வாழ்ந்தார். இவர் தனது வாழ்வின் துன்பமான சூழலில் இருந்தபோது, புனித பிரான்சிஸ் அசிசியாரை நோக்கி மன்றாடினார். இப்புனிதரிடமிருந்து எப்போதும் பல நற்பலன்களைப் பெற்றார். இதனால் புனித அசிசியாருக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க எண்ணினார். அசிசியிடமிருந்து பலமுறை திருக்காட்சிகளைப் பெற்றார். அவர் கண்ட ஒரு காட்சியில் போலினோவில் மூன்றாம் சபை ஒன்றை நிறுவும்படியாக ஆண்டவர் கூறியதாக உணர்ந்தார். அதன்பேரில் புனித பிரான்சிஸ்குவின் மூன்றாம் சபையை நிறுவி, அதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து, பொறுப்பேற்று அச்சபையை வழிநடத்தினார்.

இவர் எண்ணிலடங்கா திருக்காட்சிகளைப் பெற்று ஆண்டவரை தன் வாழ்நாள் முழுவதும் அன்பு செய்தார். இவர் தேவையிலிருப்போரையும், நோயாளிகளையும் கவனித்து பராமரித்து வந்தார். நோயாளிகள் தங்களின் வலிகளை தாங்குவதற்கு தேவையான பொறுமையைக் கற்றுத் தந்தார்.


செபம்:
பொறுமையின் மன்னரே எம் தலைவா! திருக்காட்சியாளர் ஆஞ்சலாவின் வழியாக நீர் உம் பணிக்கென ஓர் சபையைத் தோற்றுவித்தீர். புனித பிரான்சிசின் மூன்றாம் சபையிலுள்ள ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். உம் பணியை சிறப்பாக ஆற்ற தேவையான அனைத்து அருள்வரங்களையும் பொழிந்து காத்தருளும். எச்சூழலிலும் ஐயமுற்று கலங்காமல் உம்மை மட்டுமே, தங்களின் வாழ்வின் இறுதிவரை மையமாகக் கொண்டு வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment