Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 6 January 2016

இன்றைய புனிதர் 2016-01-07 பெனப்போர்ட் நகர் புனித ரெய்மண்ட் Raimund von Penafort

                                            

பிறப்பு 1175, பார்சலோனா Barcelona, ஸ்பெயின்

இறப்பு6 ஜனவரி 1275,பார்சலோனா

புனிதர்பட்டம்: 1601
பாதுகாவல்: பார்சலோனா நகர், மறைவல்லுநர்கள்

இவர் பார்சலோனா நகர் அரசரின் உறவினராய் இருந்தார். இவர் பார்சலோனாவில் மிகச் சிறந்த முறையில் தன் கல்வியை முடித்தார். பின்னர் போலோஞ்யா சென்று மறைப்பணியாற்றினார். பார்சலோனா பேராலயத்தில் மறைப்பணியாளர்கள் குழுவில் உறுப்பினரானார். பின்னர் 1222 ஆம் ஆண்டு தொமினிக் சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார். 1230 ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரியின் வேண்டுதலுக்கிணங்கி , பல திருத்தந்தையர்களின் தீர்ப்புகளை தொகுத்து எழுதி வெளியிட்டார்.

இவர் பல பள்ளிக்கூடங்களை கட்டினார். பல ஏழை மாணவர்கள் படித்து கல்வியறிவை பெற ஏற்பாடுச் செய்தார். பின்னர் புனித தோமினிக் சபையின் தலைவரானார். பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டார். ஒப்புரவு அருளடையாளத்தை தகுந்த பயனுள்ள முறையில் நிறைவேற்ற மிக சிறந்த நூல்களை எழுதினார். பல பணிகளை திறம்படச் செய்து நிறைவு கண்ட இவர் தனது 100 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.


செபம்:
எல்லாம் வல்ல கடவுளே! பாவிகள்மீதும், சிறைப்பட்டோர்மீதும் இரக்கம் கொள்ளும் சிறந்த புண்ணியத்தால் குருவாம் புனித ரெய்மண்ட் ஆன்மாவை அணிசெய்தீர். நாங்கள் பாவத்தின் பிடியிலிருந்து விடுபட்டு உமக்கு உகந்தவற்றை மனமுவந்து செய்ய அப்புனிதரின் வேண்டுதலால் எங்களுக்கு அருள் தாரும்.

No comments:

Post a Comment