Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 11 January 2016

இன்றைய புனிதர் 2016-01-12 சபை நிறுவுனர் யோஹான்னஸ் மெர்லீனி Johannes Merlini CPPS

                                        

பிறப்பு28 ஆகஸ்ட் 1797,ஸ்பெலேட்டோ Spoleto, இத்தாலி

இறப்பு12 ஜனவரி 1873,உரோம், இத்தாலி

இவர் 1820 ஆம் ஆண்டு "இயேசுவின் திரு இரத்த சபை" Kostbaren Blut என்ற ஓர் சபையை நிறுவி தாமே அச்சபையின் தலைவராகவும் இருந்து வழிநடத்தினார். சபையைத் தொடங்கிய சில ஆண்டுகளில் அமெரிக்கா நாட்டிலும் அச்சபையை பரப்பினார். 1840 ஆம் ஆண்டு 1818 குருக்களைக் கொண்டு தன் சபையை பல்வேறு நாடுகளில் பரப்பினார். பின்னர் ஸ்பொலேட்டோவில் ஆயரின் ஆலோசகராக பணியாற்றினார். அவரின் நண்பர் கஸ்பார் டெல் பூஃபலோ Kaspar del Bufalo என்பவர் "திரு இரத்த ஆராதனை" என்ற ஓர் சபையைத் தொடங்கினார். மெர்லினி அவருக்கு சபைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வழிநடத்தினார். கஸ்பார் 1837ல் இறந்துவிட்டார்.

எனவே மெர்லீனி அச்சபையையும் சேர்த்து வழிநடத்தினார். 1847 ஆம் ஆண்டு அச்சபைக்கும் தாமே சபைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறையருளால் இரு சபைகளையும் வழிநடத்திய மெர்லீனி தன் நண்பர் கஸ்பார் இறந்த அடுத்த 5 ஆண்டுகளில் இறந்தார். இவர் இறந்தபிறகு, அவரின் நண்பரின் கல்லறைக்கருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
இரக்கத்தின் இறைவா! உம் பணியை செய்வதற்கு அற்புதமான ஆட்களை நீர் தேர்வு செய்கின்றீர். உமது விலைமதிக்க முடியாத திரு இரத்தத்தால் இவ்வுலக மக்களின் பாவங்களை போக்க சிலுவையில் உம்மையே தியாகம் செய்தீர். உம் இரத்தத்தின் பெயரை தாங்கி வாழும் சபைகளை ஆசீர்வதித்து காத்து வழிநடத்திட நீர் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment