Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 25 January 2016

இன்றைய புனிதர் 2016-01-26 சபை நிறுவுனர் உரோம் நகர் பவுலா Paula von Rom

                                     

பிறப்பு347.உரோம், இத்தாலி

இறப்பு26 ஜனவரி,பெத்லேஹெம்

இவர் ஓர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஓர் திருமண மான பெண். ஐந்து குழந்தைகளின் தாய். இவர் தனது கணவர் இறந்தபிறகு விதவையானார். தன் கணவர் இறந்த சில நாட்க ளிலேயே தான் ஓர் சிறந்த கிறிஸ்தவ பெண்ணாக வாழ வேண் டுமென்று விரும்பினார். சமூகப் பணிகள் பலவற்றில் ஈடுபட் டார். தேவையிலிருப்போரை இனங்கண்டு முன்வந்து உதவி னார். இவர் சிறப்பாக எரோனிமுஸ் Hieronymus என்பவர் கற்று க்கொடுத்த மாணவர்கள் பலருக்கு பல விதங்களில் உதவினார்.
                          இவர் 385 ஆம் ஆண்டு தனது மகளுடன் பாலஸ்தீன நாட்டிற்கு சென்றார். எரோனிமுஸ் காட்டிய வழியில் மறைவல் லுநர்கள் பலர் எழுதிய கடிதங்கலை தொகுத்து பாதுகாத்தார். பின்னர் 386ல் பாலஸ்தீனா நாட்டின் தாழ்வான பகுதியில் ஏரா ளமான திருயாத்திரை தலங்களையும், துறவற மடங்களையும் நிறுவினார். அத்துடன் சில பெண் துறவிகளுக்கு வழிகாட்டி அவர்களையும் தொடர்ந்து வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து எரோனிமுஸும் அவரின் நண்பர்களும் இவரின் துற வற இல்லத்தில் வாழ்ந்து தங்களின் இறுதி நாட்களை கழித் தனர். அதன்பிறகு இவர் கிறிஸ்துவைப் பற்றி பரப்பவும் அவரை முழுமையாக அறியவும் பெத்லேகேம் சென்றார். அச்சமயத் தில்தான் இறந்தார்.


செபம்:
என்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் இறைவா! இன்று எத்த னையோ பெண்கள் தன் கணவர்களை இழந்தும் அவர்களால் கைவிடப்பட்டும் வாழ்கின்றார்கள், அப்பெண்களை நீர் கரு ணை கூர்ந்து பாரும். வாழ்வில் நம்பிக்கை என்னும் ஒளியைப் பெற்று சுடர்விட்டெரியும் தீபங்களாக மாறிட வழிகாட்டும். உம்மை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து என்றும் உம்மை பிரதிபலி த்து பலரின் வாழ்வில் ஒளியேற்றிட வழிகாட்டிட நீர் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment