Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 7 January 2016

இன்றைய புனிதர் 2016-01-08 நோரிகூம் நகர் துறவி செவரின் Severin von Norikum

                                                 

பிறப்பு 400, ஒரியண்ட் Orient

இறப்பு 8 ஜனவரி 482, பாவியானிஸ், ஆஸ்திரியா

பாதுகாவல்: பவேரியா, சிறைகைதிகள்

இவர்தான் பிறந்த ஒரியண்டிலிருந்து நோரிகூம் என்ற மாநகருக்கு மறைபரப்பு பணியை செய்ய வந்தார் என்று கூறப்படுகின்றது. அதன்பிறகு ஆஸ்திரியா வந்தடைந்து மறைப்பணியை ஆற்றியுள்ளார். மறைப்பணியோடு தேவையிலிருக்கும் மக்களை இனங்கண்டுகொண்டு, பல்வேறு விதங்களில் உதவி செய்துள்ளார். கிறிஸ்துவ மக்களின் மனதிலும், அவர்களின் மத்தியிலிருந்து தாழ்வு மனப்பான்மையை போக்க பெருமளவில் உழைத்துள்ளார். ஆரிய மக்களுக்கும் கிறிஸ்துவ மக்களுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை களைந்தார். சந்தோசத்துடனும், சமாதானத்துடனும் வாழ வழிவகுத்தார்.

இவர் ஏராளமான துறவற சபைகளை நிறுவியுள்ளார் என்று இவரின் வரலாறு கூறுகின்றது. பாசாவ்வில்Passau உள்ள துறவற மடங்களில் பலவற்றை இவர் கட்டியுள்ளார். அத்துடன் பல ஆலயங்களையும் எழுப்பி, திருப்பலி நிறைவேற்றி மக்களை ஆன்மீகத்தில் வளர்த்துள்ளார். இவரின் பெயரில் இத்தாலி நாட்டில் சில ஆலயங்களும் உள்ளதாக கூறப்படுகின்றது.


செபம்:
சமாதானத்தின் அன்பனே எம் தலைவா! இவ்வுலகில் சமாதானமின்றி வாழும் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மன நிறைவுடன் சந்தோஷத்துடன்
வாழ்ந்து, உம்மில் இளைப்பாறி உமது அன்பை நிரந்தரமாக பெற்று வாழ வரம் தந்து காத்தருளும். 

No comments:

Post a Comment